திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவிற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் உருக்கமான கவிதை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார். இந்தக் கவிதை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ’16 வயதினிலே’ முதல் ‘முதல் மரியாதை’ வரை பாரதிராஜாவுடன் நீண்டகால நட்பைக் கொண்டிருந்த வைரமுத்து, ஒரு வீடியோ மூலம் தனது அஞ்சலியைப் பதிவு செய்தார்.
“தூரிகை இல்லாமல் வண்ணமும், வண்ணம் இல்லாமல் தூரிகையும் என்னத்துக்கு ஆகும்?” என அவர்களின் கலைப் பயணத்தை உருக்கமாக விவரித்திருந்தார். இந்தக் கவிதையில் வைரமுத்து பயன்படுத்திய சில வார்த்தைகள் மற்றும் சித்தரிப்புகள், பாரதிராஜாவை ஒரு குறிப்பிட்ட சாதி அடையாளத்திற்குள் சுருக்குவதாகக் கூறி சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
செம ஸ்டைலிஷ்.. ஃபேஷன் சென்ஸால் ரசிகர்களை ஈர்க்கும் நேகா மாலிக்..!
திரையுலகைத் தாண்டி சமூகப் பார்வையிலும் பாரதிராஜாவை அணுகியிருக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வாதிட, மற்றொரு தரப்பினர் இது முற்றிலும் நண்பர்களுக்கு இடையிலான ஒரு உணர்ச்சிகரமான கவிதை மட்டுமே, இதற்குள் சாதியக் கோணத்தைத் தேடுவது தவறு என்று கருதுகின்றனர்.
பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குப் பிறகு, அடுத்த சில நாட்களிலேயே பாரதிராஜாவின் மறைவு நிகழ்ந்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு ஜாம்பவான்களை இழந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாபெரும் கலைஞர் மறைந்த துக்கமான சூழலில், இதுபோன்ற விவாதங்கள் அவர் விட்டுச் சென்ற கலைப் பயணத்தின் மீதான மதிப்பீடுகளைச் சிதைப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இமயத்தைப்
— வைரமுத்து (@Vairamuthu) June 30, 2026
புதைத்த இடம் இதுதான்
தூங்கு ராஜா தூங்கு
ஓடி ஓடிக் களைத்தவனே
கலையாத உறக்கத்தில்
கனவுகளற்ற உறக்கத்தில்
ஓய்வுகொள்
மண்ணை இழுத்துப் போர்த்துப்
படுத்திருக்கும் உன்னை
குளிரோ மழையோ
வெயிலோ புயலோ
ஒன்றும் செய்யாது
நலம் கேட்க வந்த நான்
நல்லசெய்தி
கொண்டுவரவில்லை
இதே இடத்தில்… pic.twitter.com/9mzjinnbxL

