விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்தாத த்ரிஷா: ‘அன்ஃபாலோ’ வதந்தியால் பரவும் சர்ச்சை
நடிகர் விஜய் ஜூன் 22 அன்று தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடியதை முன்னிட்டு, திரை உலகினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்தனர். ஆனால், விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகை த்ரிஷா, இந்த ஆண்டு எந்தவொரு பிறந்தநாள் வாழ்த்தும் பதிவிடாதது ரசிகர்களிடையே விவாதத்தைக் கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து, த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விஜய்யை ‘அன்ஃபாலோ’ (Unfollow) செய்துவிட்டார் என்ற வதந்தி எக்ஸ் (X) தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் வேகமாகப் பரவியது.
ஆனால், த்ரிஷா ஆரம்பத்திலிருந்தே விஜய்யின் அதிகாரப்பூர்வ கணக்கைப் பின்தொடரவில்லை (Follow செய்யவில்லை) என்பதே உண்மை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலவாறாக யூகித்து வருகின்றனர்.
சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!
ஆகஸ்ட் 7-ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையிலும் அவர்கள் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கவனித்த நடிகை த்ரிஷா, கணவனும் மனைவியும் மீண்டும் இணையும் இந்தச் சமயத்தில் தான் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும், இந்த நேரத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினால் தேவையில்லாத கிசுகிசுக்கள் (Rumors) கிளம்பும் என்பதால்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பரவலானக் கருத்துகள் எழுந்துள்ளன.

