நடிகை வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தொடங்கி, சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயன் இடையே நீண்ட நாட்களாகவே சட்ட ரீதியான மோதல் நிலவி வருகிறது.
கடந்த காலங்களில் வனிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி, சூர்யா தேவி ரவுடிகளுடன் வந்து தன் வீட்டைப் புகுந்து தாக்கியதாக நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தத் தாக்குதல் வழக்கில் நாஞ்சில் விஜயன் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பிரதீப் ஆண்டனி நடிக்கும் முதல் படம்.. ‘பாலன் தி பாய்’ அப்டேட்..!
நாஞ்சில் விஜயன் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் இருப்பதையும், இந்த விவகாரம் தொடர்பான பணப் பரிவர்த்தனை மற்றும் அவதூறு சர்ச்சைகளையும் சுட்டிக்காட்டி சூர்யா தேவி மீண்டும் நாஞ்சில் விஜயனுக்கு எதிராகப் புகார் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இரு தரப்பிலும் தொடர்ந்து மாறி மாறி புகார்களும், சமூக ஊடகங்களில் வீடியோக்களும் வெளியாகி வருவதால் இந்த விவகாரம் சின்னத்திரை மற்றும் யூடியூப் வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

