‘நூறு சாமிகள்’ திரைப்படத்தின் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின், தாயின் உயர்வு குறித்தும் இன்றைய இளைஞர்கள் அம்மாவை நடத்தும் விதம் குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி அரங்கத்தையே நெகிழ வைத்துள்ளார். மேடையில் பேசிய மிஷ்கின், “இந்த உலகத்துல நூறு சாமிகள் இருந்தாலும், அதுல முதல் சாமி நம்ம அம்மாதான்.
இன்னைக்கு இருக்குற சில இளைஞர்கள் ரொம்ப சாதாரணமா அம்மாவைத் திட்டுறாங்க, அவமதிக்கிறாங்க. தயவுசெஞ்சு அம்மாவைத் திட்டாதீங்கடா…” என்று உருகினார். “நாம் செய்யும் தவறுகளைக்கூடப் பொறுத்துக் கொண்டு, நமக்காக மட்டுமே வாழும் ஒரே ஜீவன் அம்மா மட்டும்தான்.
பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!
தாயை மதிப்பவன் வாழ்க்கையில் எப்போதுமே தோற்றுப் போவதில்லை” என்று தாயின் பெருமைகளைத் தனது பாணியில் ஆழமாக எடுத்துரைத்தார். ‘நூறு சாமிகள்’ படத்தின் தலைப்பிலேயே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருப்பதாகக் குறிப்பிட்ட மிஷ்கின், படக்குழுவினரின் முயற்சிக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
எப்போதும் வித்தியாசமான கருத்துக்களைப் பேசும் மிஷ்கின், இந்த விழாவில் தாயின் பாசத்தைப் பற்றிப் பேசிய இந்த எமோஷனல் வீடியோ, தற்போது இணையத்தில் தாய்மார்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

