கொளுத்தும் வெயிலாலும் மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் தூசிகளாலும் சருமம் பொலிவிழந்து காணப்படும். கருமையாகவும், நிறைய முகப்பருக்கள் தோன்றும். இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகாமல் போதுமான சரும பராமரிப்பை கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
அப்படி கொடுத்தால், தான் முகம் பிரகாசமாகவும் பொலிவோடும் இருக்கும். பொதுவாக சரும பராமரிப்பு என்று வரும் பொழுது பெண்கள் சிறப்பாக இருப்பார்கள். ஆனால், ஆண்கள் அப்படியெல்லாம் இல்லை. சொல்லப்போனால், நிறைய ஆண்களுக்கு தங்களுடைய சருமத்திற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி பராமரிப்பு கொடுக்கத் தெரிவதில்லை.
ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை விரட்டும் ‘பலாக்கொட்டை’ பேஸ்ட்..!
இதன் விளைவாக, ஆண்கள் கருப்பாக காட்சியளிப்பதோடு, முகப்பரு பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்கிறார்கள். சருமத்தை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள பேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரிகின்றன.
பெண்கள் தான் போட வேண்டும் என்பதில்லை, ஆண்களும் பயன்படுத்தலாம். பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆண்களின் சருமம் சற்று கடினமானதாகவும். அதிக எண்ணெய் பசைவுகளும் இருக்கும். எனவே, அதற்கு கூடுதல் கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. அதுவும், வீட்டின் சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் புத்துணர்ச்சியுடன் பொலிவுடன் காணப்படும்.
- ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் தேனை எடுத்துக்கொண்டு அத்துடன் ஆரஞ்சு சாற்றினை சேர்த்து கலந்து அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நேரத்தை மேம்படுத்தும்.
- ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் தயிர் எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நேரில் முகத்தை கழுவ வேண்டும்.
- இந்த ஃபேஸ் பேக் சரும துளைகளை இருக்கும் அடைய செய்யும் மற்றும் சரணத்தை சுத்தப்படுத்தும் ஒரு கிண்ணத்தில், ஒரு டேபிள்ஸ்பூன் கரும்புச்சாற்றினை எடுத்து அத்துடன் சிறிது கடலைமாவை சேர்த்து செய்து கொள்ள வேண்டும். அதன் பின் முகம் மற்றும் கழுத்தில் 20 நிமிடம் தடவி ஊற வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் மூகத்தை கழுவலாம்.
- ஒரு கிண்ணத்தில் வேப்பிலை பொடியை எடுத்து அத்துடன் சிறிது துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின் குளிர்ந்த நீரன் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.
- ஒரு கிண்ணத்தில் பப்பாளி மற்றும் வாழைப்பழத்தை எடுத்து நன்றாக வசித்து அத்துடன் தேன் கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில், 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த குளிர்ந்த நீரினால், முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

