பிரபல நடிகர் ஆன ரவி மோகன் கடந்த வாரத்தில் அளித்திருந்த பேட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரிடையே பேசு பொருள் ஆனது. தனது, விவாகரத்து விவகாரம் குறித்தும் அதற்கு முன்னரும் பின்னரும் அவர் வாழ்க்கையில் எதிர் கொண்ட சம்பவங்கள் நெருக்கடிகள் மன ஓட்டங்கள் போன்றவற்றை மொத்தமாக கொட்டி விட்டார் என்று சொல்லலாம். அதுவும் கண்ணீருடன் அவர் தெரிவித்த சில விஷயங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
இந்நிலையில் 80களில் பிரபலமான நடிகையாக இருந்த அம்பிகா அவரது எக்ஸ்தள பக்கத்தில் ரவி மோகனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில்,
அன்புள்ள ரவி, மனம் தளராதே. அனைத்தும் சரியாகிவிடும். கடவுள் சற்று தாமதப்படுத்தலாம்; ஒருவேளை உன்னைச் சோதிக்கவும் கூடும். எதிர்மறையான எதையும் செய்யாதே. உனக்கு நீயே தீங்கு இழைத்துக்கொள்ளாதே. (குழந்தைகள் மீதான) உனது அன்பு, (உன் குழந்தைகளாகிய) உன் காதலை மீண்டும் உன் வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும். பிரார்த்தனை செய். முக்கியமாக, நன்றாக உறங்கு. உன்னை நன்கு அறிந்த உன் பெற்றோருடனோ அல்லது நண்பர்களுடனோ நேரத்தைச் செலவிடு.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
Dear ravi dont b weak.Everything is going to b ok. god is kind of delaying and may be testing.dont do anything negative. dont hurt yourself .ur love (towards kids)will bring yr love (ur kids)in ur life.pray.mainly https://t.co/oNWANCuYl3 withur parents or friends who knows u.
— Actress Ambika (@ActressAmbika) May 20, 2026

