விஜய்க்கு 200 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை கொடுத்து 500 கோடி பிசினஸில் உருவான திரைப்படம் தான் ஜனநாயகன் இணையத்தில் கசிந்த நிலையில், கேவிஎன் பட குழுவுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக, முன்னதாக ஜனநாயகன் எப்போதும் ரிலீஸ் ஆனாலும், பாக்ஸ் ஆபிஸ் பெரிதாக இருக்காது என்றும், பெரிய இழப்புதான் என்றும் கூறி வருகின்றனர்.

முன்னதாக, ஜனநாயகன் படம் கசிந்ததில் நேரடியாக எடிட்டர் பிரதீப் ராகவ்க்கு தொடர்பு இல்லை என்றாலும், எடிட்டிங் ரூமில் இருந்து தான் படம் திருடு போன நிலையில், அவரது கவனக்குறைவு தான் காரணம் என்றும், அதற்கு முழு பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டும் என தற்போது பட தொகுப்பாளர்கள் சங்கம் தற்காலிகமாக அவரை சஸ்பெண்ட் செய்து அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கைதானவர்களை மேலும், விசாரிக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் காவல்துறையின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் மற்றவர்களும் முன்ஜாமீன் கேட்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளவர்களும் ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் அந்த வாய்ப்புகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை பட குழுவினர், திரையரங்குகள், விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் நெட்டிசன்கள் என பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

