தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்த சீமான் அடுத்ததாக நடிகராக மாறினார். நிலைமை இப்படி இருக்க ஈழப்படுகொலையால் மிகவும் வேதனைப்பட்ட அவர் அரசியல் களத்தில் குதித்தார். இப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
தேர்தல் விதிமீறல்.. விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?..

இந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் காரைக்குடி தொகுதியில் களம் காண்கிறார். மேலும், தன் கட்சி வேட்பாளருக்காக ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி சுழன்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில், பரப்புரையின் போது அவரை சிறுவன் சந்திக்க வந்தார். அந்த சிறுவனை கட்டி அணைத்த சீமான் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார். உடனே அந்த சிறுவன் தனது உதட்டினை துடைத்து அங்கிருந்து சென்று விட்டான். அதேபோல், மற்றொரு பரப்புரையின் போது ஒரு பெண்ணுக்கு கண்ணத்தில் முத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

