இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் விரோதமாக செயல்பட்டு வரும் விடியா திமுக அரசின் திறனற்ற மற்றும் ஊழல் நிரம்பிய ஆட்சியால் தமிழ்நாட்டின் நிதிநிலை மிக மோசமான பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
அதேபோல், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து, ஒருகாலத்தில் அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாடு இன்று சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மாறிவிட்டது என்பதை வெளிக்கொணரும் விதமாக The Mirage of Zero Tolerance என்ற பெயரில் கருப்பு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை, மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர் திரு. பியூஷ் கோயல் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது.
பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!
இந்த முக்கியமான நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய தமிழக பாஜக மாநில ப்ரொஃபஷனல் செல் மாநில அமைப்பாளர் திரு.சுந்தர் ராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வில் பாஜக தேசிய செயலாளர் மற்றும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் திரு. @MenonArvindBJP அவர்கள், @BJP4TamilNadu மேலிட இணை பொறுப்பாளர் திரு. @ReddySudhakar21 அவர்கள், தமிழக பாஜகவின் அனைத்து பிரிவுகளுக்கான மாநில அமைப்பாளர் திரு. @KTRaghavanBJP அவர்கள் மற்றும் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் திரு. @gopalkagarwal அவர்கள் உடன் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

