நடிகரான விஜய் தற்போது அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். வரும் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் நிலையில், விஜய் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகம், புதுச்சேரி என மாறி மாறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய், இதுவரை எந்த ஊடகத்துக்கு பேட்டி கொடுத்ததில்லை. ஏன் கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான போதும் கூட விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்தார்.
அவர் எப்போது பேட்டி கொடுப்பார் என ஊடகங்கள் காத்திருந்து வரும் நிலையில் தொடர்ந்து அவர் தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி அவர் பிரபல தொலைக்காட்சியில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பேட்டி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் கேளுங்க.. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி!
ஜீ தொலைக்காட்சியில் வரும் ஏப்.,14 அன்று மக்கள் நாயகன் என்ற டைட்டிலோடு பேட்டி ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனிடையே அன்றைய தினம் விஜய் டிஆர்பி ரேட் எகிறும் என்றும், அதற்கு பதிலாக சன் டிவியில் போட்டியாக ஒரு படத்தை ஒளிபரப்பலாம் என்றும் கூறப்படுகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்ற போதிலும், விஜயின் பேட்டிக்காக தமிழகமே காத்திருக்கும் நிலையில், சன் டிவி எந்த மாதிரியான யோசனையுடன் களமிறங்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

