செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து வழங்க வேண்டும் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த செய்தி சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் பிரபல youtube சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களுடைய செம வைரலாகி வருகிறது.

அதில், இரண்டு தினங்களுக்கு முன்பு உதயப்பூர் அரண்மனையில், ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா இவர்களின் திருமணத்திற்கு விஜயும், திரிஷாவும் சென்று இருந்தார்கள். இவர்களின் திருமணத்தில் யாரும் செல்போன் கொண்டுவரக்கூடாது பயன்படுத்தக்கூடாது என தடையை போட்டிருந்த நிலையில், அவர்களின் திருமண புகைப்படம் எங்கேயும் வெளியாகவில்லை.

ஆனால், அந்த திருமண விழாவில் விஜயும், த்ரிஷாவும் ஒன்றாக சென்றது மட்டுமல்லாமல் திரிஷா வேண்டுமென்று விஜயுடன் செல்பி எடுத்து அதை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, சர்ச்சைகள் இவ்வளவு சென்று கொண்டிருக்கும் நேரத்தில், த்ரிஷா இப்படி செய்யலாமா? இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாக வல்லவா இருக்கிறது.
ஒருவேளை திரிஷா விஜயை பிளாக்மெயில் செய்கிறாரா என்று தெரியவில்லை. 42 வயதாகிவிட்டது இதுக்குமேல் பெரிதாக பட வாய்ப்பு வராது என்பதால் த்ரிஷா இந்த முடிவை எடுத்தாரா என்பதுவும் தெரியவில்லை.

ஆனால், விஜய், திரிஷாவை கண்டிக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிகிறது. இது எல்லாம் வதந்தி இதற்கு காரணம் திமுக என்று சொல்வது எல்லாம் பொய்.
அதேபோல, இதன் மூலமாக விஜயின் மதிப்பு 30 சதவீதம் தான் குறையும் விஜய் தலைவர் என்று ஏற்றுக்கொண்ட யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இந்த விஷயத்தில், விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். ஒன்று சங்கீதாவை விவாகரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால், சங்கீதாவுடன் வாழ வேண்டும். குடும்ப வாழ்க்கையில் இது ஒரு பிரச்சனையே இல்லை. இவை அனைத்தையும் மறந்து விட்டு குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ தொடங்கி விட்டால், நன்றாக இருக்கும்.
இந்த விஷயத்தில் விஜய் ஒரு நல்ல முடிவை எடுத்து பல சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பயில்வான் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

