பிரபல ஊடக ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே பேசிய வீடியோ ஒன்றை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில், “மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதை விட்டுவிட்டு, உங்களை முழுமையாக உணர்ந்து, தெளிவான நோக்கத்துடன் எனக்காகவே வாழும் ஒரு நிலை 44 வயதில்தான் தொடங்குகிறது” என ஓப்ரா குறிப்பிட்டிருந்தார்.
செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!
ஓப்ரா வின்ஃப்ரேவின் இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில், அந்த வீடியோவை ஷேர் செய்து ‘ஆமென்’ (Amen) என ஒற்றை வார்த்தையை பதிவிட்டுள்ளார் த்ரிஷா. சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் இந்தப் பதிவு, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

