பிராய்லர் கோழி (Broiler Chicken) விற்பனை நிறுத்தம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 31-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிராய்லர் கோழி விற்பனை காலவரையின்றி நிறுத்தப்படவுள்ளதாகப் கோழிப்பண்ணை மற்றும் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கு காரணமாக, கோழித்தீவனங்களின் விலை தாறுமாறாக உயர்வது, உற்பத்திச் செலவு அதிகரிப்பது மற்றும் கோழிப்பண்ணையாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கு பிள்ளையார் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள்.. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!
கோழி இறைச்சி விலை உயர்வது மற்றும் வியாபாரம் பாதிக்கப்படுவது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

