தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், ஜூலை 10, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று கரூர் மாவட்டத்திற்குச் செல்கிறார். கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குகிறார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மனவாசி ஊராட்சியில் ரூ. 1,700 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள தோல் அல்லாத (Non-Leather) காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
எலி காய்ச்சல் வருமோ என்ற அச்சத்தில் நோயாளிகள்.. உயிர்காக்கும் வார்டிலேயே பயம்..!
இந்தத் தொழிற்சாலை மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் – சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலமைச்சர் விஜய் சிறப்புரையாற்றுகிறார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக அவர் கரூர் செல்வது குறிப்பிடத்தக்கது. இதற்காக கரூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

