சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சில ஆண்டுகள் கழித்து இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். ஹிந்தியை தொடர்ந்து நடித்து வந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு பரீட்சையமானார்.

அதன் பின் வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜூலியட், சிங்கம் 2 எனத் தொடர்ந்தது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சிம்புவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின் ஹன்சிகா 2022 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

மகனைப் பார்க்கிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? – ஜாய் கிரிஸில்டா Open Talk..!
ஜெய்ப்பூர் இருவருக்கும் அரண்மனையில் திருவிழா போன்று இவர்களது, திருமணம் நடைபெற்றது. தற்போது மும்பை பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்பந்தத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளனர். கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சம் எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹன்சிகா முதன் முறையாக விவாகரத்து குறித்து பேசி உள்ளார்.

அதில்,
என் குடும்பம் என்னை எதற்காகவும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை. தவறான ரயிலில் ஏறிவிட்டபின் கஷ்டப்படுவதை விட அதில் இருந்து இறங்கி விடுவது தான் சிறந்தது. அதனால், இது பரவாயில்லை. நான் வருத்தப்படவில்லை. குடும்பத்தின் ஆதரவை எனக்கு இருக்கிறது. தற்போது, மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
என ஹன்சிகா அதில் தெரிவித்துள்ளார்.

