வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!
முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அபியும் நானும் படத்திற்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் திரிஷா பெற்று இருக்கிறார். திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் தக் லைஃப் இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களால் தோல்வியை அடைந்தது.

இந்த படத்திற்கு பிறகு திரிஷா நடிப்பில் அடுத்து வெளியாகியுள்ள திரைப்படம் கருப்பு. சூர்யா நடித்துள்ள இந்த திரைப்படத்தை RJ பாலாஜி இயக்கி உள்ளார். படம் மே மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே, நடிகை திரிஷா அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜயுடன் ஜோடியாக கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

இந்நிலையில், திரிஷா சினிமாவிலிருந்து விலகப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. இது தொடர்பான வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன், பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டேன். நான்கு குழந்தைகளை வளர்த்து வைக்கிறேன். அதில் இரண்டு குழந்தைகளுக்கு நேற்று இரண்டு வயது அவ்வளவுதானா? இதில் இன்னும் நான் ஏதாவது சேர்க்க வேண்டுமா? கற்பனையான வதந்திகளை இன்று நாம் கவர் செய்து விட்டோமோ ? என கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். திரிஷா இதன் மூலம் சினிமாவிலிருந்து விலகப் போவதில்லை என்பதை அவரே இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


