ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது. இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் நடிப்பில் அடுத்ததாக Cocktail 2, மைசா, அல்லு அர்ஜுன் 22, அனிமல் பார்க் மற்றும் புஷ்பா 3 ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.

இந்நிலையில், திருமணத்தை தொடர்ந்து தாய்லாந்துக்கு இருவரும் ஜோடியாக ட்ரிப் சென்றிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. திருமணம் முடிந்த ஒரு மாதமே ஆன நிலையில், தற்போது ராஷ்மிகா கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது.

இப்போது நாங்கள் மூன்று பேர் எனது ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஒரு பதவி போட்டிருப்பது தான் இந்த செய்தி பரவுவதற்கு காரணம். நெட்டிசன்களும் அவர் கர்வமாக இருப்பதாகத்தான் அறிவித்திருக்கிறார் என நினைத்துக் கொண்டு கமெண்ட்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!
ஆனால், உண்மையில் அவர் கர்ப்பமாக இல்லையாம். ராஷ்மிகா இரண்டாவது ஆக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்திருக்கிறார். RU என்கிற கற்பனை கதாபாத்திரத்துடன் அவர் பேசுவது போல அனிமேஷன் புகைப்படங்களை அந்த கணக்கில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த அனிமேஷன் கதாபாத்திரம் மற்றும் விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிகா இருப்பதைத்தான் மூன்று பேர் எனக்கு குறிப்பிட்டு அவர் போட்டோவாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவுதான் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

