தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு மக்களிடையே பெருகி வரும் பேராதரவைக் கண்டு திட்டமிட்டே தவெக மீது அறிவாலய வட்டாரம் சேறு பூசும் வேலைகளில் இறங்கியுள்ளது என ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது கழகத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டும், மக்களிடையே நமக்குக் கிடைத்து வரும் பேராதரவைக் கண்டும் அச்சமடைந்துள்ள அறிவாலய வட்டாரம், திட்டமிட்டே கழகத்தின் மீது சேறு பூசும் வேலைகளில் இறங்கியுள்ளது.
குறிப்பாக, அடுத்தடுத்து அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை (Fake News) சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பி வருகின்றனர்.
சில ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் உண்மையை ஆராயாமல், ஒருதரப்பு தரும் தவறான தகவல்களை அப்படியே செய்திகளாக வெளியிட்டு வருவது தவறு. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இது போன்ற உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரங்களுக்குத் துணை போக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
கேரவனுக்குள் நடிகையிடம் அத்துமீறல்.. பா**யல் புகாரில் பிரபல இயக்குநர் கைது..!
வெற்றிக் கழக கண்மணிகளே.. வெற்றிக் கழகத்தின் உண்மையான போர்வீரர்களான நீங்கள், இது போன்ற மலிவான அரசியலால் உங்கள் கவனம் சிதற இடமளிக்காதீர்கள். இத்தகைய சலசலப்புகள் நமது பயணத்தின் வேகத்தைக் குறைக்க எடுக்கப்படும் முயற்சிகள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தோழர்களே, தொடர்ந்து மக்களுக்கான பணிகளில் கவனம் செலுத்துங்கள். எவை உண்மை, எவை ஜோடிக்கப்பட்ட பொய்கள் என்பதைப் பிரித்தறியும் தெளிவு தமிழக மக்களுக்கு நன்கு உண்டு.
அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ளத் திரணியற்றவர்கள் நடத்தும் இந்த “Fake News Factory” (பொய் செய்தித் தொழிற்சாலை) மீது விரைவில் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டத்தின் வாயிலாக இத்தகைய அவதூறுகள் முடக்கப்படுவது உறுதி.
பொய் செய்திகளைப் புறக்கணிப்போம்! நீதி வெல்லும்! வெற்றி நிச்சயம்! இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

