திமுக அரசு குறித்து விமர்சித்து அதிமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்களே! உங்களுக்கு சில கேள்விகள்..
தூத்துக்குடியில் 17 வயது பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்றுடன் நான்கு நாட்கள் ஆகப் போகிறது, ஆனால் இன்றுவரை பிரேத பரிசோதனை நடந்து முடியவில்லை, அறிக்கை வெளிவரவில்லை..
கரூர் விவகாரத்தில் 41 உயிர்கள் பலியான போது ஒரே இரவில் அனைவருக்கும் பிரேத பரிசோதனை செய்ய முடிந்த ஸ்டாலின் மாடல் அரசால்,
ஒரு சிறுமி… ஒரேயொரு சிறுமி, அவருக்கு நான்கு நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை ஏன் இன்னும் செய்ய முடியவில்லை?
எப்படி அந்த சிறுமி இறந்தார்? ஏன் இறந்தார்? யாரால் இறந்தார்? இப்படி எந்த கேள்விக்கும் இதுவரை விடை தெரியவில்லை.
நான்கு நாட்கள் ஆகியும் கூட இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் யார் என்பதை விடியா அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதெல்லாம் பார்க்கும் போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக உங்கள் அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி தமிழக மக்களுக்கு எழுகிறது!
இப்படி இவ்வளவு பிரச்சனைகள், மனவேதனையில் தமிழ்நாடும் ,தமிழ்நாட்டு மக்களும் இருக்கும் சூழ்நிலையில் எப்படி உங்களால் மட்டும் ரீல்ஸ் எடுத்து அதை பொதுவெளியில் வெளியிட்டு புளகாங்கிதம் அடைய முடிகிறது?

இப்படி உங்கள் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில், சட்டம் ஒழுங்கில் என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்க, எதற்கு உங்களுக்கு இந்த வீண் விளம்பரங்கள்!
வீணாய் போன விடியா ஆட்சிக்கு! வீண் விளம்பரங்களே சாட்சி! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

