அமைச்சர் கேஎன் நேரு மீது பல்வேறு ஒப்பந்தத்தில் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடியா திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஒப்பந்த மோசடி, பணி நியமன மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவவேற்கிறோம்.
திமுக ஆட்சி என்றாலே கமிஷன், கலக்ஷன், கரப்ஷன் என்று கூறும் அளவிற்கு லஞ்சம் புரையோடி இருப்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது.
முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன் திமுக அமைச்சர்களின் ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டீர்கள். இன்று உங்கள் அரசின் அமைச்சர்களின் ஊழல் முகத்திரையை உயர்நீதிமன்றம் ஆதாரங்களுடன் ஊழல் முகாந்திரம் உள்ளதாகக் கருதி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது.

ஒரு துறையிலேயே கிட்டத்தட்ட 2000 கோடிக்கும் மேல் ஊழல் என்றால் இன்னும் வெளிவராத பல துறைகளில் நடைபெறுகின்ற ஊழலை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
இந்த ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இனியும் தாமதிக்காமல் அமைச்சர் கே.என். நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

