தமிழ்நாடு அரசின் உலகளாவில் சுற்றுலா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமாக இமேஜிகா Imagica World Entertainment நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சுமார் ரூ.650 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள இத்திட்டம் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் இமேஜிகா நிறுவனம் புதிய Amusement Parkஐ அமைக்க உள்ளது. சென்னையில் வொண்டர்லா நிறுவப்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக முக்கிய நகரமாக கருதப்படும் கோவையை இமேஜிகா நிறுவனம் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய தீம் பார்க், ஓட்டல் நிறுவனங்களில் ஒன்றான இமேஜிகா தமிழகத்தில் கால் பதிக்க உள்ளதால் சுற்றுலாத்துறையில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.

