Close Menu
    What's Hot

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சுடுகாட்டில் ரத்த வெள்ளத்துடன் கிடந்த ஆண் சடலம்… கோவை சூலூரில் ஷாக்!
    தமிழ்நாடு

    சுடுகாட்டில் ரத்த வெள்ளத்துடன் கிடந்த ஆண் சடலம்… கோவை சூலூரில் ஷாக்!

    Prime ReporterBy Prime ReporterDecember 16, 2025Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    A man Dead Body Found in Crematorium
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூலூர் அருகே சுடுகாட்டில் பெயிண்டர் ஒருவர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பரத். பெயின்டிங் வேலை செய்து வந்த இவர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும், இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பரத் நேற்று இரவு தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் காலை வரை வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

    இதையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் பரத்தைத் தேடி, வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, வாயில் ரத்தக்கறையுடன் அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரின் காலணிகள் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த மாலை உள்ளிட்டவையும் அருகே சிதறிக் கிடந்தன.

    உடனடியாக இது குறித்து சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர், பரத் இறந்து கிடந்ததைப் பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

    பின்னர், அவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பரத்தின் உறவினர்கள் பேசும்போது, “பரத் மர்மமான முறையில் இறந்து கிடப்பதால், யாரோ அவரை கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கிறோம். எனவே, காவல் துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பரத்தின் பின்னணி மற்றும் மரணம் குறித்த காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Coimbatore Coimbatore News crematorium Murder ஆண் கொலை குற்றம் கோவை சுடுகாடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Don't Miss

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து மற்றும் கடலைப் பருப்பின் ரகசிய மருத்துவ நன்மைகள் குறித்தும், வாயுத் தொல்லையின்றி சமைக்கும் முறை குறித்தும் மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.