நடிகை அபிராமி திரைத்துறையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், இன்ஸ்டாகிராம் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு அஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ உள்பட சில படங்களில் நடித்தார் அபிராமி. எனினும் பெரிய அளவிலான சினிமா வாய்ப்புகள் வராததால், சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அந்தச் சீரியலும் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்புகள் குறைந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைபர் (Subscriber) வசதி மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி மாதம் தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். சப்ஸ்கிரைபர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக அவர் பதிவிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. ரோஜா பூக்கள் பதித்த கருப்பு நைட் ரோப் உடையில் அவர் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

