ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மு=’கருப்பு’ படத்தில் வில்லன் கூட்டத்துடன் இணைந்து “நாங்க நாலு பேரு, எங்களுக்கு பயம் கிடையாது” என்ற பாடலுக்குத் தான் மிகவும் சிரமப்பட்டு நடனமாடியதாகவும், ஆனால் அந்தப் பாடலும் காட்சிகளும் இறுதிப் படத்தில் இடம்பெறவில்லை என்றும் மன்சூர் அலிகான் குற்றம்சாட்டியுள்ளார். தான் தன் மகன்களைத் திரையரங்கிற்கு அழைத்துச் சென்று படம் பார்த்ததாகவும், படத்தில் தன் காட்சிகள் வராததைக் கண்டு அவர்கள் கேட்ட கேள்விக்குத் தான் பதில் சொல்ல முடியாமல் வருந்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!
தனது கடின உழைப்பால் உருவான அந்தக் காட்சிகளைத் தயாரிப்பாளர் தரப்பு யூடியூப்பில் வெளியிடும் என்று கூறியிருந்த நிலையில், அதையும் அவர்கள் செய்யவில்லை என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் மாஸான காட்சிகளுக்காகவும், பில்டப்களுக்காகவும் இதுபோன்று பல துணை நடிகர்களின் காட்சிகள் வெட்டி வீழ்த்தப்படுவதாகவும், மலையாளப் படங்களைப் போல அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

