தமிழ் திரையுலகில் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படும் மற்றொரு இனிமையான செய்தி, நடிகை பிரிகிடா மற்றும் நடிகர்-இயக்குநர் ஆனந்த் ராம் இடையிலான காதல் அறிவிப்பு. ‘பவி டீச்சர்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை பிரிகிடா, நடிகர் ஆனந்த் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கும் தனக்கும் இடையிலான காதலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

“திரையில் மட்டுமே அழகான காதல் கதைகள் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வாழ்க்கை எனக்கு ஒரு நிஜமான காதல் கதையைத் தந்துவிட்டது” என்று குறிப்பிட்டு, ஆனந்த் ராமைத் தனது வாழ்வின் அன்பு (Love of my life) என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். பிரிகிடாவின் இந்த அன்பான பதிவிற்கு, “நமது பயணத்தைத் தொடங்கிவிட்டோம், நம்முடைய ‘என்றென்றும்’ இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது” என்ற அர்த்தத்தில் ஆனந்த் ராமும் தனது அன்பைப் பகிர்ந்துள்ளார்.
கடைசி கால் லாக் ஸ்கிரீன்ஷாட்.. தந்தை பாக்யராஜ் குறித்து சரண்யாவின் உருக்கம்..!
இவர்களது காதலுக்கு இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்துவிட்டதாகவும், எனவே இந்த ஆண்டிற்குள்ளேயே இவர்களது திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ‘இறுவின் நிழல்’, ‘வேலன்’ போன்ற படங்களில் நடித்த பிரிகிடாவும், ‘மீசைய முறுக்கு’ மற்றும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ (இயக்குநர்) படங்களில் பணியாற்றிய ஆனந்த் ராமும் இணைந்து, தங்களின் புதிய வாழ்க்கைப் பயணத்தை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Amma… I think you’d love her too. 🖤🖤
— Ananth (@ActorAnanth) June 29, 2026
I’m sure your smiling from the above world seeing us take cinema & Love & Life together forever 🧿🖤
The birthday can’t be more great 🖤⭐️🧿
Here’s to our forever.
LovveeSe @Brigidasagaoffl 🖤 https://t.co/LtfacbI31B

