90-களில் தமிழ் சின்னத்திரையின் முடிசூடா ராணியாக வலம் வந்த பிரபலத் தொகுப்பாளினி ‘பெப்சி’ உமாவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகின்றன. அந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள், அன்று பார்த்த பெப்சி உமாவா இது என்று வியப்புடன் ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
“பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!
சன் டிவியில் ஒளிபரப்பான “பெப்சி உங்கள் சாய்ஸ்” என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் தடையின்றி தொகுத்து வழங்கி சாதனை படைத்தவர் உமா. தனது தனித்துவமான குரல், தமிழ் உச்சரிப்பு மற்றும் எப்போதும் புடவை மட்டுமே அணிந்து தோன்றும் கண்ணியமான ஸ்டைலால் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாகப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். சின்னத்திரையில் குஷ்புவுக்கு அடுத்தபடியாக இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மவுசு இருந்தது குறிப்பிடத்தக்கது.


