தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27 வது ஆண்டு விழா இன்று மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பங்கேற்று பேசுகையில், இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்திருப்பது குறித்து சரத் பவார் பேசியிருந்தார்.
அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி மிக நீண்ட காலமாக பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரைப் போன்ற ஒரு தலைவர் இல்லை என்ற சித்தரிப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தில், பிரதமர் என்பது ஒரு அரசியலமைப்பு பதவி.
3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!
அந்த பதவியை நாம் மதிக்க வேண்டும். ஆனால், நேரு நேரு தான் இந்தியர்களால் அவருடைய தியாகங்களை மறக்க முடியாது. தேச கட்டுமானத்திற்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் நேரு ஆற்றிய பங்களிப்பை மாற்ற முடியாது, மறக்கவும் முடியாது.
அது மதிக்கப்பட வேண்டும். நேருவை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. மகாத்மா காந்தியின் தலைமையிலான சுதந்திரப் போராட்டத்தின் போது நேரு பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

