நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது.
இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீலாங்கரை டூ போயஸ் கார்டன்.. முதலமைச்சர் விஜயை புறக்கணித்த ரஜினி?..!
இந்நிலையில், ஆர்த்தி ரவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, ஆர்த்தி ரவி தாக்கல் செய்த வழக்கில் மனுவில் தன்னை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட கெனிஷாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், ஆர்த்தி குறித்து பாடகி கெனிஷா எந்தவிதமான கருத்துகளையும் பகிர கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கெனிஷா குறித்து மிகவும் மோசமாகவும், கீழ்தரமாக உன் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கெனிஷா என்னை விமர்சிப்பதற்கு முன் என்னை யார் என்று தெரிந்து கொண்டு அதன் பின்னர் விமர்சியுங்கள் என்று அவர் வெளியிட்ட உள்ள நீண்ட வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருந்த காலகட்டத்தில், வாழ்வாதாரத்திற்காகவும், வெறும் 500 ரூபாய்க்காகவும் பார்களில் (Bars) இரவு நேரங்களில் பாடிப் பணம் ஈட்டியதாகக் கூறியுள்ளார். தான் 4 மாதக் குழந்தையை இழந்த துயரத்தையும், அந்தப் பாதிப்பிலிருந்து மீள தனக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தனை அவமானங்கள், துரோகங்கள் மற்றும் கடுமையான மன உளைச்சல்களைக் கடந்துதான் இன்று ஒரு பாடகியாகவும், ஆன்மீக ஆலோசகராகவும் (Spiritual Healer) தடம் பதித்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ இதோ,

