தமிழக முதல்வர் விஜய் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை சமீபத்தில் சந்தித்தார். அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் சந்திக்க திட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினி அதை புறக்கணிக்க உடனே கிளம்பி சென்று விட்டாராம். பலரும் அவருக்கு விஜய் முதலமைச்சர் ஆனது பிடிக்கவில்லை. அதனால், தான் இமயமலைக்கு சென்று குகையில் ஒரு 15 நாட்கள் வரை இருந்தால்தான் அவருக்கு மன நிம்மதி கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள்.
ஆனால், அவர் பெங்களூருவில் உள்ள வாழும் கலை என்ற ஆசிரமத்திற்கு சென்றுள்ளதாகவும் அங்கு அவர் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, தனது மனதில் இருந்த மிகப்பெரிய நடிகர் சூப்பர் ஸ்டார் என்ற கருவத்தை எல்லாம் உடைத்தது இந்த ஆசிரமம் தான் என்று கூறினார்.
விஜய் ஜாதகத்தில் அப்படியென்ன விசேஷம்?.. தமிழகம் தாண்டி தடம் பதிப்பார்..!
இதை அவர் ஏன் கூறினார். இயல்பாகத்தானே பேசினார் அல்லது உள்நோக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. முதலமைச்சர் விஜய் உங்கள் வீட்டிற்கு வருகிறார் என்றால், அவரை வரவேற்று வாழ்த்தலாமே ஆனால், அதை செய்வதை விட்டுவிட்டு அவரை புறக்கணிப்பதா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
மேலும், விமான நிலையத்தில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது முறையாக பதில் சொல்லாமல் சென்றுவிட்டார். விஜய் என்ன உங்க பங்காளியா? இல்ல பகையாளியா? நீங்கள் பார்க்க பார்க்க வளர்ந்தவர் தானே. அப்படி இருக்கும்போது அவர் வீட்டிற்கு வருகிறார் எனும் போது அவரை வரவேற்று வாழ்த்தி இருக்கலாமே என்றும் பலர் கூறி வருவதாகவும், செய்யாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

