பிக் பாஸ் புகழ் மாயாவின் தங்கையான பாடகி ஸ்வாகதாவை பிரபல இசையமைப்பாளர் அத்துமீறியதாக அவர் பேசியிருந்தார். இது தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் யார் அந்த இசையமைப்பாளர் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இசையமைப்பாளரின் பெயரை சொல்லியது மட்டுமில்லாமல் இந்த பிரச்சனைக்கு முன் என்ன நடந்தது பிறகு என்ன நடந்தது என்பதையும் தெள்ளத்தெளிவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், அவர் தயவு செய்து யாரையும் புகழ்பெற்ற பிரபலமான பின்னணி பாடகர் என்று சொல்லாதீர்கள். அந்த அடையாளத்தை பெற பல மேடைகளிலும் இரவு விடுதிகளிலும் தொடர்ந்து பாடக்கூடிய ஹிட் பாடல்களை அவர்கள் பாடியிருக்க வேண்டும். அவர் ஒரு வளர்ந்து வரும் பாடகி மட்டுமே.
இளையராஜா போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. கலைஞர் சொன்னதை வைத்து விமர்சிக்கும் திமுகவினர்..!
இசையமைப்பாளர் உடனான காதல் தோல்வியில் முடிந்ததால், ஒட்டுமொத்த இசைத்துறையின் மீதும் அவர் பழி சுமத்துகிறார் என்றும், அவர்களுக்கு இடையில் இருந்த உறவு என்பது டாக்ஸிக் ஆனது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு ஸ்வாகதாவிடம் இசையமைப்பாளர் கெஞ்சினார்.
ஆனால், அவர் அந்த இசையமைப்பாளரை தூக்கி வீசிவிட்டார். இஸ்பேட் இசை அமைப்பாளர் இஸ்மாயில் அவ்வளவுதான் கதை. ஆங்கிலமே தமிழே ஒழுங்காக பேசத் தெரியாத சிவசங்கரி தனது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார். அந்த பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறி மக்களை ஆத்திரமடைய செய்வது அவரது பாணி என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த முதலை கண்ணீருக்கு பின் தனது கண்டன்டுக்காக எதை வேண்டுமானாலும், செய்வார். குறிப்பாக, இது குறித்து மாயா அமைதியாக இருப்பதிலிருந்து இதில் உண்மையில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களுக்கிடையே யான ஒரு போட்டி, முன்னதாக மாயாவின் மஞ்சுளா டீச்சர் நகைச்சுவை வீடியோக்கள் மூலம் அவருக்கு கிடைத்து வரும் புகழை கண்டு ஸ்வாகதா பொறாமைப்படுகிறார். மாயா இதுவரை தன்னை பேட்டி எடுக்கவில்லை என்ற ஆதங்கமும் ஸ்வாகதாவுக்கு இருக்கிறது. இந்த உச்சியில் வெயிலில் ஊறுகாய் ஆகிவிட்டார் அந்த பாடகர் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இதுவரை இலை மறைவு காயாக இருந்த அந்த இசையமைப்பாளரின் பெயரை அப்பாட்டமாக சுசித்ரா சொல்லிவிட்டதால், என்ன ஆகும் என்ற கேள்வியும் பலரிடையே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

