தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது, மூக்குத்தி அம்மன் 2, டாக்ஸிக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். பிஸியாக நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியானது.

மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!
குழந்தை பெற்றுக் கொண்டு நடிப்பிலிருந்து விலகுவார் என்றும் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் டாக்ஸிக், மண்ணாங்கட்டி ராக்காயி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

இவற்றில், டாக்ஸிக் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நிச்சயம் அவர் நடித்திருக்கும். அனைத்து படங்களும் நயனுக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது, ரசிகர்கள். இதற்கிடையில், அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

அந்த படமோ மெகா ஹிட் ஆனது. எனவே பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்து அதன்படி செயல்பட்டார். அதன் பலனாக வம்சி இயக்கத்தில் சல்மான் கான் நடித்திருக்கும் படத்தில் ஹீரோயினாகவும் கமிட்டாய் இருக்கிறார்.

இந்த நிலையில், இப்போது அடிக்கடி மும்பையில் நயன்தாராவை பார்க்க முடிகிறது. மாதத்திற்கு இரண்டு தடவை அங்கே விசிட் அடித்து விடுகிறார். அவர் நிறைய ஹிந்தி படங்களுக்கான கதையை கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில், சமீபத்தில் அவர் மும்பையில் நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வழியாகி வைரலாகி வருகிறது.
Ladysuperstar Nayanthara spotted at restaurant pic.twitter.com/b6Dcj6p9WA
— Nayanstar (@Nayanstar) April 28, 2026

