வாஷிங்டன் / இஸ்லாமாபாத்
உலகையே போர்க்களமாக மாற்றிய அமெரிக்கா – ஈரான் இடையிலான 14 நாள் போர் நிறுத்தம் நாளை புதன்கிழமை (ஏப்ரல் 22, 2026) வாஷிங்டன் நேரப்படி முடிவுக்கு வருகிறது. இதனை நீட்டிக்க வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், சர்வதேச சந்தையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ட்ரம்ப்பின் “சாத்தியமற்றது” அறிக்கை:
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்தம் புதன்கிழமை மாலையுடன் முடிகிறது. ஈரான் தரப்பில் முறையான உடன்படிக்கை ஏற்படாத பட்சத்தில், இந்த போர் நிறுத்தத்தை நீட்டிப்பது என்பது மிகவும் சாத்தியமற்றது என எச்சரித்துள்ளார். மேலும், முறையான ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மீதான தடையை நீக்கப்போவதில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் “Do or Die” அமைதிப் பேச்சுவார்த்தை:
போர் நிறுத்தம் முடிவடைய சில மணிநேரங்களே உள்ள நிலையில், போரைத் தவிர்க்கும் நோக்கில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று இரண்டாம் சுற்று உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன.
அமெரிக்காவின் ‘பவர்‘ டீம்:
அதிபர் ட்ரம்ப் தனது மிக முக்கியமான குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்:
ஜே.டி. வான்ஸ் (துணை அதிபர்): அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாகப் பேச்சுவார்த்தையை வழிநடத்துவார்.
ஜாரெட் குஷ்னர் (சிறப்பு ஆலோசகர்): ட்ரம்ப்பின் மருமகன் மற்றும் மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தங்களில் அனுபவம் வாய்ந்த இவர், திரைக்குப் பின்னால் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வார்.
பாகிஸ்தான் மற்றும் ஈரான் தரப்பு:
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் முன்னிலையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், ஈரான் தரப்பு அதிகாரிகள் இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளனர். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலான குழுவினர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய சூழல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் தாக்கம்:
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது நடந்தால், கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடும் என்றும், உலகப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

