தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக, மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும், மனிதாபிமானம் கொண்ட நபராகவும் அறியப்பட்டவர் மயில்சாமி. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவு செய்தி சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
மேடையிலேயே தனுஷை அடித்த கே.எஸ். ரவிக்குமார்.. மேடையில் ஓப்பனாக பேசிய தனுஷ்..! (வீடியோ)
இந்நிலையில், இவரது மரணம் தொடர்பாக பலரும் இவர் மது அதிகம் அருந்தியதால் தான் சீக்கிரமே இறந்துவிட்டார் என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனை நடிகர் இளவரசு தற்போது மறுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் கூறுகையில், சினிமாக்காரர்கள் நடுத்தர வயதில் இறந்துவிட்டால் ஏதோ குடியால் இறந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறார்கள். அது உண்மையில்லை.

மயில்சாமி இறந்தபோது கூட பலரும் அப்படித்தான் கூறினார்கள். மயில்சாமி இறந்தது குடியால் இல்லை. கட்டுப்பாடற்ற உணவு முறைதான். இறந்தவர்கள் குறித்து தவறா பேசுவாங்க இல்லன்னா நல்லது பேசுவாங்க மயில்சாமி குறித்து அவர் செய்த நல்லதை மட்டும் தான் சொல்ல முடியும்.
மும்பையில் இருந்து நடிகர் விவேக் ஓபராய் வந்து நாகப்பட்டினத்தில் உதவி செய்ததை கேள்விப்பட்டு உடனே கிளம்பி சென்று அவரைப் பார்த்து நீங்கள் மும்பையில் இருந்து வந்து உதவி செய்கிறீர்கள் நான் இது கூட செய்யலன்னா எப்படி என்று தான் அணிந்திருந்த எம்ஜிஆர் முகம் போட்ட செயினை அவரிடத்தில் கொடுத்துவிட்டு வந்தார். இதுதான் மயில்சாமி என்று அந்த பேட்டியில் இளவரசன் தெரிவித்துள்ளார்.

