கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பரபரப்பான உதகை சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற காட்டு யானை பாகுபலி.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாகுபலி என்று பொதுமக்களால் அழைக்கப்படும் பிரம்மாண்டமான ஆண் யானை சில வருடங்களாக இப்பகுதியில் இருந்து வருகிறது. அவ்வப்பொழுது இந்த யானை உதகை சாலையில் பரபரப்பான போக்குவரத்துக்கு இடையே ஒரு பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதி கடந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது.
இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!
இந்நிலையில், சில மாதங்களாக கண்களுக்கு தென்படாத இந்த பாகுபலி திடீரென்று சாலையில் பரபரப்பான போக்குவரத்திற்கு இடையே உதகை சாலையில் சாவகாசமாக நடை போட்டு சென்றது.
இதனால், அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி யானை காட்டுப்பகுதிக்கு செல்லும் வரை அச்சத்துடன் காத்திருந்தனர். யாரையும் எந்த தொந்தரவும் செய்யாத பாகுபலி அமைதியாக சாலையைக் கடந்து மீண்டும் வனப் பகுதிக்கு சென்றதை அடுத்து பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் நிம்மதி அடைந்தனர்.

