தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டது.
தொகுதிப் பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகளில் போட்டி என முடிவு செய்தும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இழுபறி நிலையே நீடித்தது. பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும், அதற்கு வெறும் ஒரு மணி நேரத்திற்குள் காங்கிரஸும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக்கியுள்ளது.
இந்த பட்டியலில் மொத்தம் 28 தொகுதிகள் இடம்பெற்றுள்ள நிலையில், மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தற்போதைய 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..!
மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பொன்னேரியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஜே.ஹெச்.எம். அசான், ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை, சோழிங்கரில் ஏ.எம். முனிரத்னம், ஊத்தங்கரையில் குப்புசாமி, கிருஷ்ணகிரியில் செல்லகுமார், பென்னாகரத்தில் ஜிகேஎம் தமிழ்குமரன், ஆத்தூரில் எஸ்.கே. அர்த்தநாரி, ஈரோட்டில் கோபிநாத் பழனியப்பன், உதகையில் சி. ராமச்சந்திரன், கவுண்டபாளையத்தில் கே.பி. சூரியபிரகாஷ், சிங்காநல்லூரில் வி. ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேலும், துறையூரில் விச்சு லெனின் பிரசாத், கடலூரில் ஏ.எஸ். சந்திரசேகரன், மயிலாடுதுறையில் ஜமல் யூனஸ் முகமது, அறந்தாங்கியில் டி. ராமச்சந்திரன், காரைக்குடியில் எஸ். மங்குடி, உசிலம்பட்டியில் டி. சரவணக்குமார், சிவகாசியில் ஜி. கணேசன் அசோகன், திருவாடானையில் ராம கருமாணிக்கம், சங்கரன்கோவிலில் சங்கை கணேசன், அம்பாசமுத்திரத்தில் வி.பி. துரை, நாங்குநேரியில் ரூபி மனோகரன், குளச்சல் தொகுதியில் தாரகை கத்பர்ட், விளவங்கோட்டில் டி.டி. பிரவீன், கிளியூரில் எஸ். ராஜேஷ் குமார் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வேகமான அறிவிப்பு, தேர்தல் களத்தில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியிருப்பதையும், போட்டி மேலும் சூடுபிடித்திருப்பதையும் காட்டுகிறது.

