Close Menu
    What's Hot

    ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: மாற்று எரிபொருளுக்கு மாற அரசு அனுமதி

    April 22, 2026

    ஆப்பிள் நிறுவனத்தில் புதிய சகாப்தம்: டிம் குக் பதவிவிலகல்

    April 22, 2026

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஓராண்டு நினைவு: “இந்தியா ஒருபோதும் தலைவணங்காது”

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது… மானாமதுரை சம்பவத்திற்கு இ.பி.எஸ் கண்டனம்!
    தமிழ்நாடு

    திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது… மானாமதுரை சம்பவத்திற்கு இ.பி.எஸ் கண்டனம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Why wasn't a single question asked in Tamil in the SI exam.. Is it a verbal policy.. EPS criticism!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? “முடிந்துவிட்டது” என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?

    சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே? திமுக அரசின் “குற்றவாளிகள் கைது” நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!

    பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் #சமூகஅநீதிதிமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

    இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? “முடிந்துவிட்டது” என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

    ஆமாம் திரு. ஸ்டாலின், அவர்களே…. உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது! பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது! சமூகநீதி முடிந்துவிட்டது! மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!

    Will Tamil Nadu women trust election time money eps criticized CM Stalin

    இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் “சிறப்பாக செய்ய” காத்திருக்கிறார்கள்!

    இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Aiadmk CM Stalin DMK Edappadi Palaniswami Politics எடப்பாடி பழனிசாமி திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026
    Don't Miss

    ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: மாற்று எரிபொருளுக்கு மாற அரசு அனுமதி

    April 22, 2026

    ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், கோல் இந்தியா நிறுவனம் தனது ஏல நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது

    ஆப்பிள் நிறுவனத்தில் புதிய சகாப்தம்: டிம் குக் பதவிவிலகல்

    April 22, 2026

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஓராண்டு நினைவு: “இந்தியா ஒருபோதும் தலைவணங்காது”

    April 22, 2026

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.