சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியேற்றிய விழாவில், முதல் வரிசையில் அமர்ந்து நடிகை த்ரிஷா இந்நிகழ்வைக் கண்டுகளித்தார். கடந்த சில நாட்களாக அவர் குறித்து பரவிய வதரிகளுக்கும் விமர்சனங்களுக்கும் இந்த வருகை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!
விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் த்ரிஷாவைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது போல் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அதற்குப் பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள், அவர்கள் மூவரும் மூவர்ணக் கொடியின் நிறங்களைக் குறிக்கும் வகையில் (ஆரஞ்சு, வெள்ளை, பச்சை) மேட்ச்சிங்காக உடை அணிந்து வரிசையாக அமர்ந்திருப்பதாக விளக்கி பதிலடி கொடுத்துள்ளனர். த்ரிஷா அணிந்திருந்தது ஆரஞ்சு நிறமா அல்லது மாம்பழ நிறமா என்பது குறித்தும் இணையத்தில் விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வணக்கம் வைத்த நடிகை. கண்டுகொள்ளாத எஸ்.ஏ.சந்திரசேகர்.
— Blue Sattai Maran (@tamiltalkies) August 15, 2026
pic.twitter.com/cAz7Avs6i9

