முடி கொட்டுதா? பொடுகுத் தொல்லையா? அடர்த்தியான, கருமையான முடி வேணுமா? அப்போ இந்த மேஜிக் மூலிகை எண்ணெய் உங்களுக்குத்தான். கூந்தல் வளர்ச்சிக்கு அருமருந்தான கரிசலாங்கண்ணி (Bhringraj) எண்ணெயை எப்படி சரியா பயன்படுத்துறதுன்னு பார்க்கலாம் வாங்க.
இந்த எண்ணெயை லேசா சூடு பண்ணி, உச்சந்தலையில (Scalp) படுற மாதிரி நல்லா மசாஜ் செய்யணும். இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, முடி உதிர்வை தடுத்து, புது முடி வளர உதவி செய்யும்.
அக்குள் பகுதி கருமையால் கவலையா?.. எளிய இயற்கை வழிகள்..!
இதில இருக்கிற ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள், பொடுகை அடியோடு அழிச்சு, தலையில் ஏற்படும் அரிப்பு பிரச்சனைகளையும் சரி செய்யும். நரைமுடி பிரச்சனைக்கும் இது ஒரு சூப்பர் தீர்வு.
வாரத்துக்கு ரெண்டு முறை இந்த எண்ணெயை தேய்ச்சு, ஒரு மணி நேரம் கழிச்சு ஷாம்பு போட்டு குளிச்சிட்டு வந்தா… நீளமா, கருமையா முடி வளரும்! ட்ரை பண்ணிப் பாருங்க.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

