Close Menu
    What's Hot

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஓய்வூதியத்திட்டம் அம்போ… மோசடிகளின் மொத்த உருவமே திமுக தான்.. அன்புமணி காட்டம்!
    தமிழ்நாடு

    ஓய்வூதியத்திட்டம் அம்போ… மோசடிகளின் மொத்த உருவமே திமுக தான்.. அன்புமணி காட்டம்!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Pension scheme is a scam... DMK is the embodiment of fraud.. Anbumani is a disgrace!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ; கவுரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வும் அம்போ என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதன் பின் மூன்று மாதங்களாகியும் இன்னும் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மார்ச் மாதம் நிறைவடைந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களில் தகுதியுடையவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களை திமுக அரசு தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஏமாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 3&ஆம் தேதி அறிவித்தார். அதன்பின் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை ஜனவரி 10&ஆம் தேதி திமுக அரசு வெளியிட்டது. இவை அனைத்தையும் கடந்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் அரசு அறிவித்தது. ஆனால், அது இன்று வரை நடைமுறைக்கு வராமல் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    அதேபோல் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைப்படி , ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் போராடி வந்த நிலையில் அவர்களின் ஊதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அவர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை. மார்ச் மாதத்திலாவது ஊதிய உயர்வு கிடைக்கும் என கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இந்த மாதமும் அவர்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.

    உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததற்கும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு இரு மாதங்களாக வழங்கப்படாததற்கும் சிறப்புக் காரணங்கள் எதுவும் இல்லை. அரசு ஊழியர்களையும், கவுரவ விரிவுரையாளர்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணமும், சதியும் தான் காரணம் ஆகும். திமுக அரசு நினைத்திருந்தால், இந்த இரு அறிவிப்புகளையும் முறையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதற்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை.

    ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுக செய்தது எல்லாம் வானத்தை வில்லாய் வளைப்போம் என்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவது தான். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமின்றி அனைத்துத் துறையினரையும் திமுக அரசு திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறது. இதை அவர்கள் எவரும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

    கஞ்சா வணிகர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் குற்றவாளிகள், சந்துக் கடைகளில் சட்டவிரோதமாக மது வணிகம் செய்பவர்கள் போன்றோர் தான் திமுக ஆட்சியில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறார்கள். ஆட்சியாளர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் எவரும் மகிழ்ச்சியாகவும் இல்லை, மனநிறைவாகவும் இல்லை. காரணம்…. மோசடிகளின் மொத்த உருவமாக திமுக அரசு திகழ்வது தான்.

    திமுக ஆட்சியாளர்களின் மோசடிகளையும், துரோகங்களையும் தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். இன்னும் 3 வாரங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான தண்டனையை வழங்குவார்கள். அது திமுகவால் மறக்க முடியாத தண்டனையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani CM Stalin DMK PMK Politics அரசியல் அன்புமணி பாமக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026
    Don't Miss

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    விவாகரத்து வழக்கு விசாரணையில் காணொளி வாயிலாக நடிகர் விஜய் ஆஜரான நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; சங்கீதாவின் அடுத்தகட்ட முடிவு குறித்த பரபரப்பு தகவல்.

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026

    மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு: இலங்கை அதிபரிடம் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.